தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வரும் 21-ஆம் தேதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். வரும் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரத்திற்கான கடைசி நாளான 21-ஆம் தேதி அன்று தேசிய அளவிலான முக்கிய தலைவர்கள் சாத்தூரில் முகாமிட உள்ளனர். இது அந்தத் தொகுதியில் அரசியல் வெப்பத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது.
இந்த தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களும் மத்திய அமைச்சர்களும் தமிழகத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் அன்றைய தினம் காலை நயினார் நாகேந்திரனின் தேர்தல் பேரணியைத் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, பிற்பகல் 2 மணியளவில் சாத்தூருக்கு வருகை தரும் சந்திரபாபு நாயுடு, திறந்த வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று ‘தாமரை’ சின்னத்திற்கு ஆதரவு திரட்டுகிறார். ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருபுறம் களம் கண்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவின் வருகை பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர் தொகுதியின் சமூகக் கட்டமைப்பு இந்த முறை தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முக்குலத்தோர் சமூகத்திற்கு அடுத்தபடியாக, இங்கு நாயக்கர் சமூக மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். நாயக்கர் சமூக வாக்காளர்களின் ஆதரவு வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாகக் கருதப்படுவதால், அதே சமூகத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க தலைவரான சந்திரபாபு நாயுடுவின் பிரச்சாரம் தங்களுக்குப் பெரும் சாதகமாக அமையும் என நயினார் நாகேந்திரன் தரப்பு மலைபோல நம்புகிறது.
தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளான ஏப்ரல் 21 அன்று மாலை வரை சாத்தூரில் முகாமிடும் சந்திரபாபு நாயுடு, தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அன்று இரவே ஆந்திரா திரும்பத் திட்டமிட்டுள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசியலில் மட்டுமல்லாது, அண்டை மாநிலமான தமிழகத்தின் எல்லைப் பகுதிகளிலும் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவின் வருகை, சாத்தூர் தொகுதி வாக்காளர்களின் மனநிலையில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…
சீனாவின் லியாவோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சத்துக்கே சென்ற…
நீலகிரி மாவட்டம் குன்னூரில், பள்ளி மாணவிகள் 5 பேரைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர்…
அவசர கால பணத்தேவைக்கு நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுபவர்களுக்கு 'கோல்டு ஓவர்ட்ராஃப்ட்' சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளது. வழக்கமான நகைக்கடனில்…