சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகள் சுயமாக தொழில்கள் தொடங்கி முன்னேறி வருகின்றனர். நடிகர் நடிகைகள் ரியாலிட்டி சொக்கலில் பங்கேற்பது, தனியார் நிகழ்ச்சிகளுக்கு செல்வது, போட்டோ சூட் நடத்துவது என எப்போதும் பிஸியாக இருக்கின்றனர். இந்த பதிவில் சுயமாக தொழில் செய்யும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் பற்றி பார்ப்போம். முதலாவதாக சின்னத்திரை நடிகை சந்தோஷி. அரிசி, மரகத வீணை, அண்ணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

இவர் சொந்தமாக சென்னையில் மேக்கப் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். அடுத்ததாக நடிகர் ஸ்ரீ. ஆனந்தம், அகல்யா, மலர்கள், இதயம், பந்தம் யாரடி நீ மோகினி உள்ளிட்ட சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தை போல சீரியலில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சொந்தமாக நடிகர் ஸ்ரீ தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அடுத்ததாக வெள்ளித்திரையில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் பப்லு நடித்துள்ளார். இவர் அரசி, வாணி ராணி, கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு சென்னை புறநகரில் ஏராளமான ஹோட்டல்கள் சொந்தமாக உள்ளது அடுத்ததாக நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள்.

வெள்ளி திரையில் நடிகையாக வலம் வந்த வனிதாவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. வனிதாவுக்கு சொந்தமாக ஃபேஷன் பொட்டிக் உள்ளது. நடிகை ஸ்ருதிஹா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானார். முன்னதாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு அழகு சாதன துறையில் ஆர்வம் அதிகம். ஸ்ருதிகா சொந்தமாக இரண்டு பிரபலமான அழகு சாதன பிராண்டுகளை வைத்துள்ளார். அடுத்ததாக பிரபல நடிகர் சஞ்சீவ். இவர் வெள்ளித்திரை சின்னத்திரை என கலக்கி கொண்டிருக்கிறார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல சீரியலில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் லட்சுமி சீரியலில் கதாநாயகனாகவும் நடித்த வருகிறார். இவர் தனது குடும்பம் நடத்தும் காபி ஷாப் தொழிலை கவனித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக விஜே மகேஸ்வரி. பிரபல தொகுப்பாளினியான விஜே மகேஸ்வரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார். இவர் சொந்தமாக ஒரு உணவகம் வைத்துள்ளார். மேலும் ஃபேஷன் பொடிக்கையும் நடத்தி வருகிறார்.

