தமிழகத்தில் மீண்டும் ஜாதி விவகாரத்தால் ஒரு சாதிய படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து (29) என்பவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து வரும் இடையில் நேற்று காலை சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் காந்திநகர் பகுதிக்கு வந்து சாதி பெயரை சொல்லி அங்கிருந்தவர்களை மிகவும் இழிவாக பேசியுள்ளார்.
அப்போது அங்கிருந்து சுடலை முத்து அதனை தட்டி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆத்திரத்தில் இருந்த சுந்தர் மற்றொரு நபருடன் திரும்பி வந்து காந்திநகர் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த சுடலை முத்துவை சரமாரியாக அறிவாளால் வெட்டியுள்ளார். உயிருக்கு பயந்து ஓடிய சுடலை முத்து என்பவரை சுந்தர் மற்றும் அவருடன் வந்த நபரும் சாதி பெயரை சொல்லி ஓட ஓட வெட்டி படுகொலை செய்துள்ளனர். எனது இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுடலைமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகிறார்கள். பட்டப் பகலில் இளைஞரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…