கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலம் அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து ஓடிக்கொண்டிருந்த போதே அதன் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறுவதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக சாமர்த்தியமாக பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். அந்த சமயத்தில் பேருந்துக்குள் சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து தீப்பிடிக்கத் தொடங்கியதும் பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.
True Kerala Story in 60 Seconds.
Ottapalam a small town in Palakkad, but what happened there is a masterclass in crisis management.
A moving bus caught fire & you can see a 60 second display of citizen bravery.
10th Second: The bus doors opened. People started coming out.… pic.twitter.com/7usNBTGhyZ
— FeverChills🥴 (@RebelR3volution) February 18, 2026
இந்த இக்கட்டான சூழலில், அந்தப் பகுதியில் இருந்த உள்ளூர் மக்கள் காட்டிய துணிச்சலான செயல் பெரும் விபத்தைத் தடுத்தது. தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே, பொதுமக்கள் ஒன்றிணைந்து அருகில் இருந்த கடைகளில் இருந்த தீயணைப்பு கருவிகள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைக்கப் போராடினர். அனைவரின் துரித முயற்சியால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக உயிர் தப்பினர். ஒரு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், உள்ளூர் மக்களின் இந்த ஹீரோயிசமான செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
