உத்தரப் பிரதேசத்தில் கணவன் ஒருவரை அவரது மனைவி கழுத்துவரை மண்ணில் புதைத்து, அவரது தலையையே சிவலிங்கமாக பாவித்து பூஜை செய்த வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், குழிக்குள் புதைக்கப்பட்டுள்ள கணவரின் தலைக்கு மேல் களிமண்ணால் லிங்கம் போன்ற அமைப்பை உருவாக்கி, அதற்கு அந்தப் பெண் பால் ஊற்றி அபிஷேகம் செய்து ‘ஹர ஹர மஹாதேவ்’ என முழக்கமிடுகிறார். இந்த வினோத வழிபாட்டின் போது அந்த நபர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாகக் கண்களை மூடி அமர்ந்திருப்பது பார்ப்பவர்களைப் பதறவைத்துள்ளது.
"Har Har Mahadev." 🙏🤣
But what happened to this uncle? Why did aunty buried him in the ground and chanting "Har Har Mahadev" for some magic?
It really makes me laugh and wonder why people do such things. Sheer stupidity. pic.twitter.com/KQKUE46LO3
— Mission Ambedkar (@MissionAmbedkar) February 16, 2026
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கலவையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “பக்திக்கும் பைத்தியக்காரத்தனத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது” என்று சிலர் விமர்சிக்க, “இப்படிப்பட்ட ஆபத்தான செயல்களை ஆன்மீகம் என்ற பெயரில் ஊக்குவிக்கக் கூடாது” எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வினோதச் செயல் ஒருபுறம் வேடிக்கையாகப் பார்க்கப்பட்டாலும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய இத்தகைய செயல்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இணையத்தில் இந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது.
