வெறும் 199 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் வழங்கும் அசத்தலான ஆஃபர்.. நீங்க மிஸ் பண்ணிடாதீங்க..!

By Nanthini on ஆனி 10, 2025

Spread the love

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக களமிறங்கியுள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது பல சலுகைகளை அறிவித்து வருவது மட்டுமல்லாமல் புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

இப்படியான நிலையில் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் கஷ்டப்படும் சாதாரண மக்களுக்கு உதவும் வகையில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒரு மலிவு ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றது. அதன்படி வெறும் 199 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் போன் கால்ஸ் பெறலாம். இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மாணவர்கள் மற்றும் மிடில் கிளாஸ் மக்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.