பகீர்… ஆதார் கார்டு கேட்கும் சாக்கில் வீட்டிற்குள் புகுந்து… தம்பதி மீது கொடூர தாக்குதல்… மனைவி ரத்த வெள்ளத்தில் பலி… கணவர் உயிருக்கு போராட்டம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்வபம்…!

By Swetha on ஆவணி 6, 2026

Spread the love

பல்நாடு மாவட்டம் பெடக்கூரப்பாடு ஆஞ்சநேய சுவாமி பொம்மை மையம் அருகே சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், வீட்டிலிருந்த தம்பதியினரிடம் அவர்களின் ஆதார் கார்டுகளைத் தருமாறு கேட்டுள்ளனர்.

தாங்கள் யார் என்றும், ஆதார் கார்டுகளை எதற்காகக் கேட்கிறீர்கள் என்றும் அந்தத் தம்பதியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அக்​காலிகள், மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர்.

   

https://twitter.com/Telugufeedsite/status/2084919197142773777/video/1

   

மேலும், கணவரின் தலையில் கம்பியால் பலமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த கணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.