சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த வதந்திகளால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தேவையற்ற பீதியைக் குறைக்க மத்திய அரசு தற்போது அதிரடி அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் மாவட்ட வாரியாக விநியோகத்தைக் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதே வேளையில், ஊடகங்கள் இதுதொடர்பான செய்திகளை வெளியிடும்போது, பழைய வீடியோக்களையோ அல்லது புகைப்படங்களையோ மீண்டும் மீண்டும் காட்டி மக்களைக் குழப்பமடையச் செய்யாமல், துல்லியமான தேதி மற்றும் நேரத்துடன் கூடிய நேரடி காட்சிகளை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தட்டுப்பாடு குறித்து அஞ்சத் தேவையில்லை என்றும், விநியோகச் சங்கிலி சீராக இருப்பதை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் பகுதியில், 26 வயது பள்ளி ஆசிரியை ஒருவர் 15 வயது சிறுவனைப்…
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…
ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…