சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த வதந்திகளால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தேவையற்ற பீதியைக் குறைக்க மத்திய அரசு தற்போது அதிரடி அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் மாவட்ட வாரியாக விநியோகத்தைக் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதே வேளையில், ஊடகங்கள் இதுதொடர்பான செய்திகளை வெளியிடும்போது, பழைய வீடியோக்களையோ அல்லது புகைப்படங்களையோ மீண்டும் மீண்டும் காட்டி மக்களைக் குழப்பமடையச் செய்யாமல், துல்லியமான தேதி மற்றும் நேரத்துடன் கூடிய நேரடி காட்சிகளை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தட்டுப்பாடு குறித்து அஞ்சத் தேவையில்லை என்றும், விநியோகச் சங்கிலி சீராக இருப்பதை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…