CINEMA
‘சினிமால நிலைக்கணும்னா கண்டிப்பா அது வேணும்’… மனவேதனையுடன் நடிகை புவனேஸ்வரி பகிர்ந்த கசப்பான உண்மை..
தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு பாசமலர் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர்தான் புவனேஸ்வரி. அந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து சந்திரலேகா மற்றும் சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்திருந்தார். அதே சமயம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க பிசியான நடிகையாக மாறினார்.
இதனிடையே காவல்துறையினர் இவர் மீது விபச்சார வழக்கு பதிவு செய்த நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்து போனது.இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில், கற்பு என்பது பெண்களுக்கு முக்கியமானது. அதனை தற்போதுள்ள மர்டர் பெண்கள் புரிந்து கொள்வதில்லை. சினிமா துறையில் தனக்கு நடிகை சரோஜாதேவி போன்ற கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தது.
ஆனால் தற்போது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு தன்னை பற்றி வந்த செய்திகள் தனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் தனக்கும் அந்த விஷயத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது எனவும் சினிமாவில் திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும் எனவும் யாரையும் நம்பி வரக்கூடாது என புவனேஸ்வரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.