கொஞ்ச நேரம் தனியா வா… காதலன் அழைத்ததால் நம்பி சென்ற பிளஸ் 2 மாணவி… நொடி பொழுதில் நடந்த அதிபயங்கர சம்பவம்…!

Spread the love

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துர்காடா பகுதியை சேர்ந்த தீப்தி என்ற 17 வயது மாணவி பிளஸ் டூ படித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த அசோக் (19) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். தசரா பண்டிகையை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தீப்தி காக்கிநாடாவில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனை அறிந்த அசோக் அங்கு சென்றுள்ளார். பிறகு காதலியை தனியாக வருமாறு அழைத்துள்ளார். உடனே தீப்தி அதே பகுதியில் உள்ள காட்டேறு கால்வாய்க் கரை அருகே சென்றுள்ளார்.

காதலியின் வருகைக்காக காத்திருந்த அசோக் திடீரென்று தன் கையில் வைத்திருந்த பிளேடால் தீப்தியின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மாணவி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். உடனே அங்கிருந்து தப்பிச் சென்ற அசோக் ரயில் முன் பாய்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவருடைய உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் காதலியை கொன்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“டெபாசிட் காலி.. 100 பேர் தோல்வி”… இபிஎஸ் அதிகாரத்திற்கு செக்?… – எடப்பாடிக்கு எதிராகத் திரும்பிய மா.செக்கள்… வெளியான பகீர் தகவல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சிக்குள் பெரும்…

31 seconds ago

உங்க வண்டியில் இந்த ஸ்டிக்கர் இருக்கா?… அப்போ ரூ.2000 அபராதம் உறுதி… போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு…!

சமூகத்தில் பிறப்பால் அனைவரும் சமம் என்கிற தத்துவத்தை நிலைநாட்டவும், ஜாதிய அடையாளங்களால் ஏற்படும் பிரிவினைகளைத் தவிர்க்கவும் பல்வேறு மாநில அரசுகள்…

9 minutes ago

“49 விநாடி வீடியோ… கோட் சூட்டில் விஜய் & ராகுல்”… பதவியேற்பு விழாவிற்கு முன் வெளியான ‘தீப்பொறி’ அப்டேட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு…

15 minutes ago

“மாசம் 50000 கொடு இல்ல ரேப் கேஸ்ல உள்ள தள்ளிருவேன்” திருமணம் ஒரு பிசினஸ்..? ரூ.3.93 லட்சம் நகையோடு மாயமான மனைவி.. சூரத்தை உலுக்கிய சம்பவம்..!!

சூரத்தைச் சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனக்குத் திருமணத்திற்காகப் பெண் தேடி வந்த நிலையில், 'Shaadi.com' இணையதளம்…

18 minutes ago

“கணவருக்கு வயசாகிடுச்சி” காதலன் தான் என் ஆசையை நிறைவேத்துவான்… 6 பிள்ளைகளை தவிக்க விட்டுவிட்டு ஓடிப்போன தாய்.. பரிதவிக்கும் பிள்ளைகள்..!!

ஆறு பச்சிளம் குழந்தைகளைத் தவிக்கவிட்டுத் தனது காதலனுடன் ஓடிப்போன ஒரு பெண், "கணவன் வயதாகிவிட்டார், காதலன் தான் எனது ஆசைகளைப்…

22 minutes ago

“ரஜினி, கமலுக்கு விஜய் மீது பொறாமை”… பாரதி கண்ணன் ஓப்பனா சொன்ன அந்த ஒரு விஷயம்.. தீயாய் பரவும் வீடியோ….!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராகப்…

24 minutes ago