சென்னையில் உள்ள இபிஎஸ் வீட்டில் விரைவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அதற்கு காரணம் அவருடைய வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தான். DGP அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கி மர்ம நபர், இபிஎஸ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் அனுப்பியதன் அடிப்படையில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டன.
அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இறுதியில் அது ஒரு வதந்தி என தெரிய வந்தது. கவர்னர் மாளிகை மற்றும் நடிகர் எஸ்வி சேகர் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அந்த நபர் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றன.
