குட் நைட், லவ்வர் என கடந்த இரண்டு வருடங்களாக அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த மணிகண்டன் அடுத்ததாக ஹீரோவாக நடித்த படம் குடும்பஸ்தன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் . இவர் “நரை எழுதும் சுய சரிதம்” என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்னர் அவர் நடித்த லவ்வர் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இப்போது ‘குடும்பஸ்தன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜேஸ்வரி காளி சாமி இயக்கி உள்ளார். இந்த படம் ஜனவரி 24ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் ரிலீஸ்ஆகியுள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து riview கொடுத்துள்ளார் புளூ சட்டை மாறன். அதில், “படத்தின் ஆரம்பத்தில் ஹீரோ அவசர அவசரமாக கதாநாயகியை சாதி மறுப்புத் திருமணம் செய்கின்றார். இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தாலும், கடைசிய ஹீரோ குடும்பத்துடன் இணைந்து வாழ்கின்றார். பெற்றோர்களுக்கும் சரியான வருமானம் இல்லை என்பதால் ஹீரோவின் வருமானத்தை நம்பிதான், மொத்த குடும்பமும் உள்ளது. இப்படி தான் படத்தின் கதை நகர்கிறது.
நடிகர் கல்யாணத்தை பண்ணுறாரு. குடும்ப வாழ்க்கைக்குள்ள போறாரு. அவருக்கு நெறைய கடன் கஷ்டம் வருது அப்படின்ற மூடுல தான் நம்மள படம் பார்க்க வைக்குறாங்க. ஆனா அதை விட்டுட்டு ஒரு எப்படி வேணுனா வாழலாம் அப்படின்ற கூட்டத்துல இப்படி தான் வாழணும்னு நினைக்குறவன் வாழ்ந்தான்னா எவ்ளோ கஷ்டப்படுவான் என்று செட் பண்ணி படத்தை பண்ணியிருந்தா ரொம்ப சீக்கிரமா நாம ரசிச்சிருக்கலாம்.
ஆரம்பத்துல படம் எதை நோக்கி போகுதுன்னு புரிய லேட் ஆச்சு. எப்படி வேணுனா வாழலாம்ம் மத்தியில் இப்படி தான் வாழ்வேன் அப்படிங்குறவன் எப்படிலாம் கஷ்டப்படுவான் இறுதியில் என்னாச்சு அபப்டின்ற கதையை ஸ்ட்ராங்க் ஆ பண்ணியிருந்தா இன்னுமே சுவாரஸ்யமா இருந்திருக்கும். படம் கொஞ்சம் நீளம். இருந்தாலும் இந்த படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ஒரு படம் தான்” என்று கூறியுள்ளார்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…