டெல்லி போட்ட மிரட்டல் பிளான்?…. சிக்கிய செந்தில்பாலாஜி… திமுகவுக்கு வந்த ரகசிய நெருக்கடி… தமிழ்நாட்டில் வெடிக்கப்போகும் அடுத்த அரசியல் பூகம்பம்….!

By Nanthini on ஆடி 19, 2026

Spread the love

மத்தியில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்கு திமுகவின் மறைமுக ஆதரவை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், திமுகவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கும் நோக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கை மீண்டும் தீவிரப்படுத்த டெல்லி மேலிடம் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

அதே நேரத்தில், அண்மைக்காலமாக தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் சில நகர்வுகளை திமுக எதிர்த்து வருவதால், இந்த மசோதா விவகாரத்தில் தங்களுக்கு திமுகவின் ஆதரவு கண்டிப்பாகக் கிடைக்கும் என்று பாஜகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் பெரிதும் நம்புகின்றனர்; இதனால் தமிழக அரசியலில் மீண்டும் அமலாக்கத்துறை மற்றும் தொகுதி மறுவரையறை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.