கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை சந்தித்து பாஜக அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “விஜய்க்கு சரியான இடத்தை அரசு கொடுக்கவில்லை. கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை. தமிழக அரசுக்கு கூட்டத்தையும் சட்ட ஒழுங்கையும் கட்டுக்குள் கொண்டு வர தெரியவில்லை. விஜய் தான் குற்றவாளி என்ற கருத்தை ஏற்க முடியாது கூட்ட நெரிசலுக்கு விஜய் தான் காரணம் என்பதையும் ஏற்க முடியாது. பத்தாயிரத்து மேல் கூட்டம் கூடும்போது எஸ்பி சம்பவ இடத்திற்கு வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை?
இந்த சம்பவத்திற்கு அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். எஸ்பி, ஆட்சியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் .யாருக்கும் தொந்தரவு வரக்கூடாது என்பதற்காக சனிக்கிழமைகளில் பிரச்சாரம் என்கிறீர்கள். பிரச்சாரம் செய்வதால் சிறுவர்கள், பெண்கள் வரத்தான் செய்வார்கள். வார இறுதியில் பிரச்சாரம் செய்தால் பெண்கள் குழந்தைகள் உயிரிழந்துள்ளார்கள். எல்லா மக்களுக்கும் ஆதரவாக விஜய் இருக்க வேண்டும். தாமதமாக வருவார் என விஜய்யை குற்றம் சொல்ல முடியாது. மூன்று மணி முதல் 10 மணிக்குள் வருவார் என்று அனுமதி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு கட்சி தலைவர் வராவிட்டால் பிரச்சாரம் செய்ய அனுமதிக்காதீர்கள். பாஜக சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி 'தமிழக வெற்றி கழகம்' (தவெக)…
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல்…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து,…
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் திமுக அடைந்த தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை…
உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில், மகளின் திருமணத்திற்காக ஆசையோடு ஏற்பாடுகளைச் செய்து வந்த தந்தை, திருமணத்திற்குச் சில நாட்களே இருந்த…