தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலைமை மாறி தற்போது விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பாஜக விஜய்க்கு முடிந்த உதவிகளை செய்து தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்நிலையில் கூட்டணி ஆட்சி டிமான்டுக்கு இபிஎஸ் முரண்டு பிடித்தால், விஜய் ஒரு ஆப்ஷனாக பாஜக வைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். திமுகவை வீழ்த்துவது மட்டுமல்லாமல் தமிழகத்தில் கால் பதிப்பதிலும் குறியாக உள்ள அக்கட்சி, இபிஎஸ் ஒத்துவராவிட்டால், விஜய் தலைமையில் NDA கூட்டணியை அமைக்கவும் தயங்காதாம். அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் (ஓபிஎஸ், டிடிவி தினகரன்) மற்றும் அதிருப்தியாளர்கள் (KAS), பாமக, தேமுதிகவையும் உள்ளே கொண்டுவர வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…