மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று கனமழை கொட்டி தீர்த்ததால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது. நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கனமழை மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது.
இந்நிலையில் நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிடுவதற்கு பாஜக எம்பி கஜென் முர்மு சென்று இருந்தார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் மீது சிலர் கற்களை வீசி கடுமையாக தாக்கிய நிலையில் பாஜக எம் பி முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்தம் சொட்ட சொட்ட அவர் காரில் ஏறி சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது
