பீகாரில் பாஜக காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி கொடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. சட்டமன்ற தேர்தல் இந்த வருடம் இறுதியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் ராகுல்காந்தி தேர்தலில் முறைகேடுகள் இடம் பெறுவதாக கூறி வாக்காளர்கள் அதிகார யாத்திரை என்ற பேரணியை தொடங்கி உள்ளார். இந்த பேரணியில் பிரதமர் மோடி மற்றும் அவருடைய தாயார் மீது சிலர் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக பாஜக சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடியை திட்டியவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட மோசமான வார்த்தைகளை கண்டித்து பாஜக சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது பாட்னா காங்கிரஸ் அலுவலகத்தில் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது காங்கிரஸ் தொண்டர்களும் குவிந்தார்கள். திடீரென்று பாஜக காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் கட்சி கொடிகளால் தாக்கி கொண்டார்கள். அங்கு பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த போலீஸ் விரைந்து வந்து இரண்டு தரப்பினரையும் விளக்கி விட்டுள்ளார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மின்துறை தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து முறையான சிபிஐ விசாரணை…
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நாளை மதியம் 12 மணிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலையில் தோன்றி முக்கிய…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஒரு இயக்கம் மற்றொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்பதில் தான்…
இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மதர் டெய்ரி, சுமார் 4 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்,…
திருமணமான முதல் இரவே போர்க்களமாக மாறிய ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அறையில்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது.…