பெண்களுக்கான பாதுகாப்பான நகரத்தை நேற்று தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 31 நகரங்களில் 12000- திற்கும் மேலான பெண்களிடம் கருத்துக் கேட்ட நகரங்களின் தரவரிசையில் பாதுகாப்பான பட்டியலிடப்பட்டுள்ளது. சட்டக் கல்லூரி நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட குழு இந்த கருத்துக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது. நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமா என்ற நகரில் தான் பெண்கள் அதிகம் பாதுகாப்பாக உள்ளதாகவும், பட்டியலில் முதல் இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆணும் பெண்ணும் சமம் என்ற பங்களிப்பில், பெண்களுக்கான கட்டமைப்பில் வசதிகளும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள நகரம் பீகாரின் பாட்னா மற்றும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகினவாகும். ஆணதிகாரம் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், ஐஸாவல், காங்டாக், இதாநகர் மற்றும் மும்பை ஆகியவை பாதுகாப்பான நகரப்பட்டியலில் உள்ளது. பின்தங்கிய நகரங்களாக ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா, டெல்லி, பரிதாபாத், பாட்னா மற்றும் ஜெய்ப்பூர் உள்ளது. ஒட்டுமொத்த கணக்கெடுப்பில் 60% பாதுகாப்பு என்றும் 40 % பாதுகாப்பை உணரவில்லை என்றும் பதிலளித்துள்ளனர்.
கல்வி நிறுவனங்களில் 86 % பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இரவு நேரத்தில் பாதுகாப்பு ஒன்றும் உணரப்படவில்லை என்று கூறியுள்ளனர். அதேபோல் இரவு நேரத்தில் போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பே இல்லை என்றும் கூறியுள்ளனர். பணியிடங்களில் 91% பாதுகாப்பை உணர்கிறோம் என்றும். பணியிடங்களில் 50% பேர் பாலியல் தொல்லை இருப்பதாகவும் கூறியுள்ளனர். பாதுகாப்பு துறையில் உள்ள அதிகாரிகளை 25% பெண்களே நம்புவதாக தெரிவித்துள்ளனர். இப்போது உள்ள பாதுகாப்பே போதுமானது என்று 69 % குறைபாடு உள்ளது என்று 30 % தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களிலேயே பாலியல் துன்புறுத்தல் வந்ததாக 7% பெண்கள் கூறியுள்ளன. 24 வயதுக்குள் இருக்கும் பெண்கள் 14 % பாலியல் தொல்லை அனுபவித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இளம் பெண்கள் இரண்டு மடங்கு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளோம் என்று கூறியுள்ளனர். போக்குவரத்தில் 29%, சுற்றுப்புறங்களில் 39%. பாலியல் துன்புறுப்புகள் ஏற்பட்டால் மூன்றில் ஒரு பங்கு பெண்களே புகார் அளிக்கின்றனர் என்று அறிக்கையில் தெரியவந்துள்ளது.
டேராடூனில் இராணுவ வீரர் ஒருவரின் மகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 32 வயதான ராகுல் கந்துரி என்ற ஆசிரியருடன் திருமணம்…
வெள்ளத்தின் கொடூரப் பிடியில் சிக்கித் தன் தாயை இழந்துவிட்டோம் என்ற உண்மை கூடத் தெரியாமல், யாரோ ஒருவரால் இழுத்துச் செல்லப்படும்…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் ஆபாசப் பதிவுகளைப் பரப்புபவர்கள்…
உலகின் மிகச்சிறந்த மற்றும் மர்மமான தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர்.…
புகழ்பெற்ற கர்நாடக இசை வீணை கலைஞரான வீணா காயத்ரி, சென்னை மந்தைவெளியில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று உணவு…
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி…