பிக் பாஸில் பரபரப்பான இரண்டாவது வாரம் தொடங்கியது… இந்த வாரம் யாரெல்லாம் நாமினேட் ஆகியிருக்கிறார்கள் தெரியுமா…?

By admin on ஐப்பசி 14, 2024

Spread the love

பிக் பாஸில் பரபரப்பான இரண்டாவது வாரம் தொடங்கி இருக்கிறது. நேற்று எலிமினேஷன் எபிசோட் எதிர்பார்த்ததை விட பயங்கரமாக இருந்தது. ரவீந்தர் வச்சு செஞ்சு விட்டு தான் சென்றிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு பதிலாக ரவீந்தர் twist வைத்துவிட்டார். மக்கள் ரவீந்தர் வெளியே வந்ததும் பேசியதை அனைவரும் கண்டு ரசித்தனர். விஜய் சேதுபதியும் ரவீந்திரன் பேச்சை கேட்டு ரசித்து என்ஜாய் பண்ணினார் என்று தான் கூற வேண்டும்.

   

அடுத்ததாக இன்று இரண்டாவது வாரத்தில் முதல் நாளில் காலையில் எழுந்ததும் பெண்களும் ஆண்களும் தனித்தனியாக டிஸ்கஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். எப்படி இனிமேல் பிளான் செய்து விளையாடுவது. Grocery எடுக்க யாரை அனுப்புவது என்று டிஸ்கஸ் செய்து கொண்டே இருக்கிறார்கள். அடுத்ததாக பெண்கள் அணியில் ஒருவரை ஆண்கள் அணிக்கு அனுப்புவது ஆண்கள் அணியில் இருந்து யாரை பெண்கள் அனுப்புவது என்ற பேச்சுவார்த்தை நடக்கிறது.

   

இதற்கிடையில் முத்துகுமாரிடம் அன்சிதா சண்டே இடுகிறார். அதற்கு அடுத்ததாக கேப்பிட்டன்சி டாஸ்க் நடக்கிறது. பாக்ஸின் மேல் குறிப்பிட்ட நபர்கள் இருக்கிறார்கள். அதில் இல்லாதவர்கள் வெளியே டைசை உருட்டி நம்பருக்கு தகுந்தார் போல் எலிமினேட் செய்வது போன்ற போட்டி ஏற்பாடு செய்திருந்தார் பிக் பாஸ். இந்த கேப்பிட்டன்சி போட்டியில் வென்று சத்யா இந்த வார கேப்டனாக ஆகியிருக்கிறார்.

 

அடுத்ததாக நாமினேஷன் பிராசஸ் நடக்கிறது. இந்த முறை வழக்கத்துக்கு மாறாக பிக் பாஸ் ஆண்கள் அனைவரையும் பெண்களை நாமினேட் செய்யும்படியும் பெண்கள் அனைவரையும் ஆண்களை நாமினேட் செய்யும்படியும் கூறி இருந்தார். அதன்படி இந்த வாரம் நாமினேட் ஆகி இருப்பவர்கள் ஜாக்குலின், தீபக், சௌந்தர்யா, ரஞ்சித், தர்ஷாகுப்தா, ஜெஃப்ரி, அர்ணவ், முத்துக்குமார், விஷால், சாச்சனா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். விஜய் சேதுபதி தனித்துவமாக விளையாட வேண்டும் என்று சொன்னதை எடுத்துக்கொண்டு இந்த வாரம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.