தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கும் வரவேற்பை விட ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதன்படி தற்போது ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 18 ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தி பிக்பாஸை வழக்கம் போல சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் பிரபலமான ஸ்ருதிகா அர்ஜூன் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்ற இவர் சூர்யாவுடன் ஸ்ரீ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான இவர் சினிமாவை வீட்டை விலகிய நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். அந்த நிகழ்ச்சி மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களிடம் நன்கு பிரபலமானார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தனது டிரேட்மார்க் சேட்டைகளால் சல்மான் கானையும் கவர்ந்து வரும் இவர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அங்கேயும் உருவாக்கி விட்டார். பிக்பாஸ்ஹே சுருதிஹாவின் பேனாக மாறிவிட்டார்.
ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியும் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் அனைவரும் பினாலே நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேமிலி ரவுண்டு நடைபெற்று வரும் நிலையில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வீட்டுக்குள் வந்து அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறார்கள். அதன்படி ஸ்ருதிகாவின் கணவர் அர்ஜூன், மற்றும் மகன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர். தனது மகனை கட்டி அணைத்து சுருதிகா தேம்பித் தேம்பி அழுகின்றார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றாலோ அல்லது வேலையை விட்டு நீக்கப்பட்டாலோ, அந்த…
அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்தியர், அங்குள்ள மருத்துவக் கட்டணங்களின் கொடூர நிதர்சனத்தைச்…
இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…
நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…