CINEMA
61 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை கோவை சரளா.. காரணம் இவுங்க ரெண்டு பேர் தானா..?
நடிகை கோவை சரளா, தமிழ் சினிமாவில் மனோரமாவுக்கு அடுத்தபடியாக நகைச்சுவை நடிகையாக பல படங்களில் நடித்தவர். இப்போதும் நடித்துக்கொண்டு இருப்பவர். கவுண்டமணி, செந்தில் எஸ்எஸ் சந்திரன் என, பல காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். குறிப்பாக பாலு மகேந்திரா இயக்கிய சதிலீலாவதி படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கே, கோவை சரளா தான் ஜோடியாக நடித்திருந்தார். வயது 65 கடந்து, இப்போதும் மிக முக்கிய காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார் கோவை சரளா.
இதுகுறித்து நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, இப்போதும் கவுண்டமணி, செந்தில், கோவை சரளா காமெடி காட்சிகளை மக்கள் விரும்பி ரசித்து பார்க்கின்றனர். பல படங்களில் கவுண்டமணிக்கு முறைப்பெண்ணாக இருக்கும் கோவை சரளாவை, செந்தில் டாவடிப்பது தான் கதையாக இருக்கும். பல படங்களில் கவுண்டமணிக்கு, செந்திலுக்கு ஜோடியாக நடித்தவர்தான் கோவை சரளா.
கவுண்டமணி ஹீரோவாக நடித்தார். ஆனால், அவர் ஹீரோவாக நடித்த படத்தில் கோவை சரளாவை தனது ஜோடியாக நடிக்க வைக்கவில்லை. கோவை சரளா, எஸ்எஸ் சந்திரனுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தார். கோவை சரளாவுக்கு திருமண ஆசை இல்லாமல் போனதற்கு காரணம், அவருக்கு அப்படி ஒரு உடல் தேவை இருக்கவில்லை. பல படங்களில் கவுண்டமணி, செந்திலுடன் சந்தோஷமாக நடித்ததால், அவருக்கு அந்த ஆசையே வரவில்லை. ஆனால், கவுண்டமணி நடன நடிகையாக வந்த ஷர்மிலியை பிடித்துக்கொண்டதால், கோவை சரளாவை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் என கூறி இருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.