Connect with us

CINEMA

மனைவி கைது… ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது வந்த திடுக்கிடும் செய்தி.. நடிகர் நாகேஷ் என்ன செய்தற் தெரியுமா..?

நடிகர் நாகேஷ், தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜியை போல மற்றும் ஒரு தன்னிகரில்லாத கலைஞன். நடிகர் கமல்ஹாசன் இப்போதும் தனது நடிப்பு குரு என குறிப்பிடும் நடிகர்கள் இருவர். ஒருவர் சிவாஜி கணேசன், மற்றொருவர் நாகேஷ்தான். அந்த அளவுக்கு தமிழ் திரையுலகில் மிக முக்கியமானவராக மறைந்த பின்பும் இன்றும் இருக்கிறார். அப்படிப்பட்ட நாகேஷ் வாழ்வில் நடந்த மிக துயரமான ஒரு சம்பவம் இதுதான்.

Nagesh

   

நாகேஷின் மனைவி ரெஜினாவுக்கு, செல்வராஜ் என்ற தம்பி உண்டு. பயங்கர குடிகாரராகிய இவர், எப்போதும் குடித்துவிட்டு வந்து அக்காவிடம் பிரச்னைகள் செய்வது வழக்கம். மனைனவியின் தம்பி, தனது மச்சினன் என்ற முறையில் நிறைய பணம் கொடுத்து, தேவையான வசதிகள் செய்து கொடுத்து நல்ல முறையில் அவரை நாகேஷ் வைத்திருந்தும், அவர் குடித்துவிட்டுச் செய்யும் பிரச்னைகள் தீரவே இல்லை. அவரால் பயங்கர மன உளைச்சலில், நிம்மதியின்றி தவித்திருக்கிறார் நாகேஷ். அவனுக்கு எதுவுமே செய்யாதீங்க என, மனைவி ரெஜினா சொன்னதையும் மீறி நிறைய பணம் கொடுத்திருக்கிறார் நாகேஷ்.

Nagesh

இந்நிலையில், தில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங்கில் சிவாஜி, பாலையா, ஆகியோருடன், வைத்தி கேரக்டரில் நாகேஷ் நடித்துக்கொண்டிருந்த போது, படத்தின் இயக்குநர் ஏபி நாகராஜனுக்கு போன் வந்திருக்கிறது. அதில், குடிபோதையில் தகராறு செய்த தனது தம்பியை, நாகேஷின் மனைவி ரெஜினா கொலை செய்துவிட்டதாகவும், அவரை போலீசார் கைது செய்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை தயங்கியபடியே நாகேஷிடம் சொன்ன போது சுதாரித்துக்கொண்ட நாகேஷ், இப்போது தொழிலை பார்க்கலாம். தொழில்தான் முக்கியம்.

Nagesh

இந்த காட்சியை முடித்துவிட்டு நான் போகிறேன்,’ அந்த காட்சியை நடித்து முடித்து விட்டுதான் சென்றிருக்கிறார். சிறையில் இருந்த அவரது மனைவியை நாகேஷ் சந்தித்த போது, சினிமாவில் நடித்து, எல்லோரையும் சிரிக்க வைக்கும் உங்களை நிம்மதியாக, சந்தோஷமாக வாழ அவன் விடவில்லை. உங்கள் வேதனையை தீர்க்கவே அவனை கொன்றேன், என அவரது மனைவி, நாகேஷூக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.இதை மறைந்த நடிகர் மனோபாலா, ஒரு நேர்காணலில் கூறி நாகேஷ் போன்ற உன்னத கலைஞன் யாருமில்லை என நெகிழ்ந்து பாராட்டி இருக்கிறார்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top