Categories: சினிமா

‘ ஒரு காலத்துல, ரோட்டுல தள்ளுவண்டியில் காய்கறி வித்தவன் நான்’ – தனது பிளாஷ்பேக் குறித்து, வெளிப்படையாக பேசிய நடிகர் காளி வெங்கட்

Spread the love

சினிமாவில் வெற்றி பெற்ற பிறகு, நடிகர்களின் ஆடம்பரமான வாழ்க்கை, அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் உற்சாக வரவேற்பு, கோடிக்கணக்கில் சம்பளம், பொது இடங்களில் அவர்களுக்கான மரியாதை போன்றவை நம்மை வியப்படையவே செய்கிறது. ஆனால், நடிகராக மாறுவதற்கு முன்பு, சாதாரண மனிதர்களாக அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை பலருக்கும் தெரியாது. அப்படி தன் கடந்த கால வாழ்க்கை குறித்த சில விஷயங்களை சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார் நடிகர் காளி வெங்கட்.அந்த நேர்காணலில் நடிகர் காளி வெங்கட் கூறியதாவது.. சினிமாவில் எனக்கு எந்த பின்புலமும் இல்லை. நான் யாரோட வாரிசும் இல்லை. சினிமாவில் எனக்கு யாரையுமே தெரியாது. சினிமாவுக்குள் வந்தது, கண்ணை கட்டி சுவத்துல முட்டிக்கிட்டு நின்றது போல்தான் ஆரம்பத்தில் இருந்தது. சினிமாவில் இந்த மாதிரி ஒரு இடத்துக்கு தான் வரவேண்டும் என்பது எல்லாம் எனக்கு ஆரம்பத்தில் தெரியாது. சினிமாவுக்குள் வர வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதை எப்படி அணுகுவது என்றே எனக்கு தெரியாது.சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு, நானும் ஒரு சாதாரண மனிதனாக நிறைய கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன். 2006ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க ட்ரை செஞ்சேன். ஆனால், 1998லேயே சினிமாவுக்காக வந்துவிட்டேன். அந்த இடைப்பட்ட எட்டு வருஷ காலத்துல, என்னென்னமோ வேலை எல்லாம் செஞ்சேன். மளிகை கடையில் வேலை செஞ்சேன். வாட்டர்கேன் சப்ளை செஞ்சேன். டீக்கடை வெச்சிருக்கேன். ரோட்டில், தள்ளுவண்டியை தள்ளீட்டு போய் காய்கறி வித்து இருக்கிறேன், என்று தன் கடந்த கால கஷ்டங்கள் குறித்து வெளிப்படையாக கூறி இருக்கிறார் நடிகர் காளி வெங்கட்.

admin

Recent Posts

“என் மகளுக்கு சுதந்திரம் தான் முக்கியம்…!” கல்யாண மேடையில் மணமகனின் அராஜகம்… திருமணத்தையே நிறுத்திய மாஸ் தந்தை…!”

ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் அருகே உள்ள ரச்சார்லா மண்டலம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும்…

3 minutes ago

காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் நேர்ந்த கொடூரம்… 20 லட்சம் வரதட்சணைக்காக பறிபோன இளம் பெண்ணின் உயிர்… டெல்லியை உலுக்கிய மர்ம மரணம்…!

டெல்லியில் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் ஆக்ரிதி (28) என்ற இளம் பெண், லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு…

5 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ… ஓடும் வாகனங்களுக்கு இடையே நடுரோட்டில் தரையிறங்கிய பாராகிளைடர்…!

ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில், மக்கள் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த பொதுச் சாலையில் பாராகிளைடர் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட…

10 minutes ago

BREAKING: பதவியை ராஜினாமா செய்தார்… அரசியல் பரபரப்பு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தாய்மாமா மகனும், மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ். ராஜா, அக்கட்சியில்…

18 minutes ago

“அடேங்கப்பா, கதை இப்படித்தான் போகப்போகுதா?…” முடிவுக்கு வந்த நீண்ட நாள் காத்திருப்பு… ‘ஹார்ட் பீட்’ சீசன் 3 புரோமோ அவுட்… கசிந்தது முக்கிய கதைக்களம்…!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மருத்துவத் தொடர் 'ஹார்ட் பீட்'.…

22 minutes ago

“விஜய்க்கு அந்த தைரியம் இருக்கா…?” த.வெ.க தலைவரை நோக்கி பாய்ந்த 500 கோடி குவாரி விவகாரம்…! எம்பி நேரடி அட்டாக்…!!!

தேனி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆண்டிபட்டி மற்றும் வருசநாடு பகுதிகளில் புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்த தேனி…

23 minutes ago