Categories: சினிமா

அஜித்தால் மோகன்லால்க்கு ஏற்பட்ட பாதிப்பு… விடாமுயற்சி படத்தால் LYCA எடுத்த அதிரடி முடிவு…

Spread the love

அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கார் ரேசராகவும் இருக்கிறார். தனது 18 ஆவது வயதில் கார் ரேசிங்கில் பங்கேற்க தொடங்கினார் அஜித்குமார்.அதே நேரத்தில் மாடலிங் செய்து வந்தார். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அஜித்குமார் காதல் மன்னன், வாலி, காதல் கோட்டை, பூவெல்லாம் உன் வாசம் போன்ற திரைப்படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தார் அஜித்குமார். 2000 காலகட்டத்திற்கு பிறகு கமர்சியல் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் அஜித்குமார்.

என்னதான் நடிகராக ஆனாலும் அவ்வப்போது கார் ரேசிங்கிலும் பங்கேற்பார் அஜித்குமார். தற்போது இவரது அணி கூட துபாயில் நடந்த கார் ரேசிங்கில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தை பிடித்தது. மேலும் இவருக்கு இந்த வருடம் இந்தியாவின் பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இந்த திரைப்படத்தை தயாரித்தது LYCA நிறுவனம் தான். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் வசூல் பெறவில்லை. உலக அளவில் ஒட்டுமொத்த வசூலே 100 கோடி பக்கம்தான் இருக்கிறது. அதனால் லைக்கா ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கிறது. அது என்னவென்றால், மலையாளத்தில் முரளி கோபி எழுத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் திரைப்படம் எம்புரான். இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த படத்தை தயாரிப்பதும் LYCA தான்.

ஆனால் விடாமுயற்சி கை கொடுக்கவில்லை என்பதால் எம்புரான் படத்திற்கு சரியான நிதியை LYCA வால் கொடுக்க முடியவில்லை. ஆனால் படத்தை முடித்தாக வேண்டும் என்பதற்காக மோகன் லால் பிரித்விராஜ் ஆகியோர் சம்பளமே இல்லாமல் விரைவாக படத்தை முடிக்க வேண்டும் என்று வேலை செய்து கொண்டிருக்கிறார்களாம். இதன் மூலம் அஜித் நடித்த விடாமுயற்சியினால் பாதிப்படைந்தது மோகன்லால் பிரித்விராஜ் ஆகியோர்தான்.

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

2 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

2 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

3 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

3 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

3 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

3 மணத்தியாலங்கள் ago