பாலா தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் பாலு மகேந்திராவின் கீழ் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் பாலா. 1999 ஆம் ஆண்டு விக்ரமை வைத்து “சேது” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
அடுத்ததாக 2001 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து “நந்தா”, 2003 ஆம் ஆண்டு “பிதாமகன்”, 2009 ஆம் ஆண்டு “நான் கடவுள்”, 2011 ஆம் ஆண்டு “அவன் இவன்”, 2013 ஆம் ஆண்டு “பரதேசி”, 2016 ஆம் ஆண்டு “தாரை தப்பட்டை” ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் தேசிய திரைப்பட விருதுகள் என பல விருதுகளை வென்று இருக்கிறது.
பாலாவின் திரைப்படங்கள் சென்டிமென்ட் கலந்ததாக ஆழமான கருத்துக்களை கொண்டதாக இருக்கும். அதனால் மிகவும் பிரபலமானார். பாலாவின் படத்தில் நடித்தால் போதும் எல்லா நடிகருக்கும் ஒரு திருப்புமுனை கிடைக்கும் என்ற அளவுக்கு ஒரு நடிகரின் கெட்டப்பில் இருந்து நடிப்பிலிருந்து அனைத்தையும் மாற்றி விடுவார் பாலா. தற்போது பாலா இயக்கி அருண் விஜய் நடித்த “வணங்கான்” திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் முதலில் நடித்தது சூர்யா தான். சூர்யா ஒரு 20 சதவீதம் ஷூட்டிங்கை முடித்த பிறகு படத்திலிருந்து வெளியேறிவிட்டார். அதற்கான காரணம் இதுவரைக்கும் தெரியவில்லை.
ஆனால் தற்போது ஒரு நேர்காணலில் பாலா, வணங்கான் படத்திலிருந்து சூர்யா வெளியேறியதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் வணங்கான் படத்திற்கு கன்னியாகுமரியில் லைவ் லொகேஷன் ஷூட்டிங் பண்ண வேண்டி இருந்தது. சூர்யாவை வைத்து அந்த இடத்தில் ஷூட் பண்ண முடியல. ஓவரா கூட்டம் கூடியது. இந்த காரணத்தினால் தான் அவர் படத்தை விட்டு வெளியேறினார். அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் விரைவில் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று கூறினார். இதை ஒரு சிலர் ஒத்துக் கொண்டாலும் பலர் இது நம்பற மாதிரியா இருக்கு என்று பேசி வருகின்றனர்.