நடிகர் பாபி சிம்ஹாவை நேரடியாக தாக்கி பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகின்றது.
இந்தியன் 2 திரைப்படம் தொடர்பாக பலரும் பலவிதமான விமர்சனங்களை தெரிவித்து வந்தார்கள். எப்போதும் போல பயில்வான் ரங்கநாதன் தனது பாணியில் படம் நல்லா இல்லை என்று ஓபனாக கூறிவிட்டார். மேலும் இப்படம் தொடர்பாக இப்படத்தில் நடித்திருந்த பாபி சிம்ஹா சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.
அதில் இப்படம் மிக சிறப்பாக வந்திருக்கின்றது. உண்மையில் இது ஒரு நல்ல படம் புரியாதவர்களுக்கு இப்படம் சரி இல்லை என்று தான் கூறுவார்கள் என பயில்வான் ரங்கநாதரின் நேரடியாக தாக்கி பேசியிருந்தார். இந்நிலையில் இன்று நகுல் நடிப்பில் வெளியான வாஸ்கோடகாமா என்ற திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன் பாபி சிம்ஹாவை தாக்கி பேசியிருந்தார். அதாவது இந்தியன் 2 படம் நல்லா இல்லனா நல்லா இல்லன்னு தான் சொல்லுவோம். விமர்சனம் கூறுபவர்களை மரியாதை இல்லாமல் பேசுவது சரி இல்லை. ஒரு படத்தை பார்த்துவிட்டு அந்த படம் நல்லா இல்ல அப்படின்னா தான் அப்படத்தை சரியில்லை என்று கூறுகிறோம். அதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசி இருந்தார்.
ஆனால் கன்னடத்தில் இருந்து ஒரு நடிகர் வந்துவிட்டு விமர்சகர் போல் கண்ணா பின்னா என்று திட்டினா நாங்க திருப்பி திட்டலாமா? தொடர்ந்து மூன்று தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார். இப்போ தான் தெரியுது அவர் ஏன் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை என்று, உண்மையில் சொல்றேன் மேடை நாகரீகம் என்று ஒன்று இருக்கு, என்னை மட்டும் நீங்கள் விமர்சிக்கவில்லை எல்லாம் youtubeர்களையும் நீங்கள் விமர்சிக்கிறீர்கள். தயவு செய்து இப்படி செய்யாதீர்கள் என்று பாபி சிம்ஹாவை நேரடியாக தாக்கி பேசினார் ரங்கநாதன்.