அதிமுகவில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தற்போது முக்கிய நிர்வாகிகளுக்குப் புதிய பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் தங்களின் செயல்பாடுகளுக்கு வருத்தம் தெரிவித்த எஸ்.பி. வேலுமணி தரப்பினருக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பணன், சண்முகநாதன் மற்றும் முன்னாள் எம்பி திருத்தணி கோ. அரி உள்ளிட்டோர் கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதோடு, அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் தலைவராக பொன் தனபாலன் பொறுப்பேற்றுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியை வலுப்படுத்தவும் மூத்த நிர்வாகிகளைத் திருப்திப்படுத்தவும் இத்தகைய முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…