அதிமுகவில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தற்போது முக்கிய நிர்வாகிகளுக்குப் புதிய பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் தங்களின் செயல்பாடுகளுக்கு வருத்தம் தெரிவித்த எஸ்.பி. வேலுமணி தரப்பினருக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பணன், சண்முகநாதன் மற்றும் முன்னாள் எம்பி திருத்தணி கோ. அரி உள்ளிட்டோர் கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதோடு, அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் தலைவராக பொன் தனபாலன் பொறுப்பேற்றுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியை வலுப்படுத்தவும் மூத்த நிர்வாகிகளைத் திருப்திப்படுத்தவும் இத்தகைய முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…