#image_title
டிசம்பர் மாதம் தொடங்கிவிட்டது. 2024 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் சில நாட்களே இருக்ககின்றது. அதற்குள்ளாகவே பல ஜோசியர்கள் 2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் பொதுவாக உலகத்தில் என்ன நடக்கும் என்பதை பற்றி கணிக்க தொடங்கி விட்டார்கள். அப்படி உலகத்தின் பிரபல ஆன்மீகவாதியான பாபா வங்கா அடுத்த வருடம் எப்படி இருக்கும் என்ற கணிப்பை கூறியிருக்கிறார். இந்த பாபா வாங்க கூறியவை 90% நடந்திருக்கின்றன. அதனால் இவர் கூறுவது அனைவரும் கவனிக்கும்படியாகத்தான் இருக்கும். இந்த முறை 2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்ன கூறியிருக்கிறார் என்பதை பற்றி இனி காண்போம்.
உலகப் புகழ்பெற்ற ஆன்மீகவாதி மற்றும் மூலிகை மருத்துவரான பாபா வங்கா 1911 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சிறுவயதிலேயே கண் பார்வையை இழந்தவர். அதற்குப் பிறகு எதிர்காலத்தில் நடிக்கவிருக்கும் நிகழ்வுகளை கணிக்க கூடிய சக்தி கிடைத்ததாக கூறுகிறார். சாதாரணமாக பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நடக்கவிருக்கும் பல்வேறு சம்பவங்களை அவர் எளிதாக கணித்து கூறுபவர்.
உலக அளவில் நடக்க இருக்கும் அரசியல் மாற்றங்கள் இயற்கை பேரழிவுகள் நோய் தொற்றுகள் போன்ற பலவற்றையும் அவர் கணித்தது தற்போது வரை அப்படியே நடந்து வருகிறது. அதனால் பாபா வங்கா கணிப்புகள் சமூக வலைத்தளத்தில் எப்போதும் பேசப்பட்டு வரும் ஒரு பொருளாகும்.
அந்த வகையில் அடுத்த ஆண்டு 2025-ல் உலகப் போர் நடைபெறுவதற்கான ஒரு துவக்கமாக இருக்கும் என்று கணித்துள்ளார். மேலும் ஐரோப்பாவில் மிகப்பெரிய போர் ஒன்று துவங்கும். அது சிறிது சிறிதாக உலகம் முழுவதும் பரவி மிகப் பெரிய அளவில் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்படுத்தும் என்றும் கணித்துள்ளார். அதனால் 2025 ஆம் ஆண்டில் மிகப்பெரிய அழிவு காத்திருக்கும் போல இருக்கிறதே என்ற நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…
ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா…
வேத ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், தற்போது தான் சஞ்சரித்து வரும் மிதுன ராசியில்…