#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பது தொடர்பாக இதில் தெரிந்து கொள்வோம்.
பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி ராதிகாவை தள்ளிவிட்டு அவரின் குழந்தையை கொன்று விட்டார் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. இன்று தீர்ப்பு வழங்கி விடுவார்கள். அவருக்கு தண்டனை கிடைத்துவிடும் என்று பலரும் காத்திருக்கிறார்கள்.
ஈஸ்வரிக்கு சப்போட்டாக சாட்சி சொல்ல யாருமே இல்லாததால் ஈஸ்வரி மீதுதான் தவறு என்று தீர்ப்பு கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். உடனே ராதிகா அம்மாவுக்கு மனசுக்குள் ஒரே சந்தோஷம். அத்துடன் கோபியும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றார். அந்த நேரத்தில் பழனிசாமி பாக்கியாவிடம் பேசி புரிய வைத்து மயூவை கோர்ட்டுக்கு வரவழைக்கின்றார்.
உடனே பாக்கியா மாமனாரிடம் சென்று ஆறுதல் கூறிவிட்டு அத்தையை வெளியில் கூட்டிட்டு வந்துருவேன் என்று கூறுகிறார். அதையடுத்து லாயரிடம் சென்று அனைத்து விஷயங்களையும் கூற நீதிபதியிடம் மறுவிசாரணைக்கு நேரம் கேட்கின்றார். அதன்படி பாக்யா வந்ததும் மறுபடியும் ஈஸ்வரி கேஸ் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த சமயத்தில் ராதிகாவின் அம்மா பாக்யா வந்துட்டா ஈஸ்வரி ஜெயிலுக்கு போறத இவ பாக்க முடியாம போயிடுமோன்னு நினைச்சேன்.
ஆனா அதுக்கு முன்னாடி வந்துட்டா? என்று சந்தோஷம் அடைகின்றார். இதையடுத்து ராதிகா விழும்போது என்ன நடந்தது என்பதை கண்ணால் பார்த்த சாட்சி ஒன்று இருக்கின்றது என்று கூற உடனே பாக்கியம் மயூவை கோர்ட்டுக்குள் அழைத்து வருகின்றார். இதை பார்த்த ராதிகா உடனே அவள் மைனர் என்று கத்தி கூச்சலிடுகிறார். உடனே நீதிபதி அவரை அமைதியாக உட்கார சொல்கின்றார்.
மயூவை விசாரணை செய்த லாயர் ஈஸ்வரியை பார்த்து இவங்களை உங்களுக்கு தெரியுமா என்று கேட்க தெரியும், ஈஸ்வரி பாட்டி என்று கூறுகிறார். அன்னைக்கு உங்க அம்மா கீழ விழுந்த போது என்ன நடந்துச்சு என்று கேட்க, நான் அங்கு தான் இருந்தேன். ஈஸ்வரி பாட்டியிடம் என் அம்மா பேசிவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்துட்டு திரும்பும் போது பூச்செடி பாட்டில் தடுக்கி கீழே விழுந்துட்டாங்க.
இதைப் பார்த்து ஈஸ்வரி பாட்டி அவங்கள காப்பாத்த தான் போனாங்க. ஈஸ்வரி பாட்டி தள்ளி விடல என்று கூறிவிட்டார். இதை கேட்டதும் அதிர்ச்சியான ராதிகா அம்மாவை பார்த்து முறைக்கின்றார். இதை பார்த்த கோபி ஆத்திரத்துடன் மாமியாரை பார்க்கின்றார். இப்படி இன்றைய எபிசோடு முடிந்து விட்டது . எது எப்படியோ ஈஸ்வரி பாட்டி ஜெயிலுக்கு போகாமல் காப்பாற்றிவிட்டார் பாக்கியா.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…
திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…