Categories: சினிமா

இதுல எல்லாம் நீங்க தலையிடாதீங்க… எம்.ஜி.ஆரை எதிர்த்து துணிந்து பேசிய ஒரே இயக்குனர்..

Spread the love

சிவாஜி கணேசன் நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் பி.ஆர்.பந்தலு. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் இவர், ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்கினால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கலாம் என்று அவரை சந்தித்து கால்ஷீட் கேட்டுள்ளார். அப்போது அவர் சொன்ன கதைதான் ஆயிரத்தில் ஒருவன். அந்த கதையைக் கேட்ட எம் ஜி ஆர், அந்த படத்தில் நடிக்க சம்மதமும் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார். நாகேஷ், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்திருந்தனர். படத்தில் 4 பாடல்களை கவிஞர் வாலியும், 3 பாடல்களை கவியரசர் கண்ணதாசனும் எழுதியிருந்தனர். படமும் அதில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் ஆயிரத்தில் ஒருவன் முக்கிய படமாக அமைந்தது.

வழக்கமாக எம் ஜி ஆர் தன்னுடைய படங்களின் பாடல்களை தான்தான் உறுதி செய்வார். பாடலை யார் எழுத வேண்டும், யார் பாட வேண்டும் என்பதையெல்லாம் அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வார். அதற்கு உடன்படும் நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்களுக்குதான் படம் கொடுப்பார்.

மற்ற படங்களை போலவே இந்த படங்களின் பாடல்களையும் தான் தேர்வு செய்ய விரும்பிய எம்.ஜி.ஆர் அதற்கான முயற்சி செய்தபோது கோபமான இயக்குனர் பந்தலு “என்ன நீங்க பாடல்களில் எல்லாம் தலையிடுறீங்க, இதெல்லாம் நீங்கள் செய்ய கூடாது. நான் ஒன்றும் அனுபவம் இல்லாத ஒரு இசையமைப்பாளரை படத்திற்கு இசையமைக்க தேர்வு செய்யவில்லை. அனுபவம் உள்ளவரைத்தான் போட்டிருக்கிறேன். நானும் ஒன்றும் அனுபவம் இல்லாத இயக்குனர் இல்லை. அதனால் நீங்கள் நடிப்பதை மட்டும் கவனியுங்கள். இதில் நீங்கள் தலையிட வேண்டாம்” என்று எம்.ஜி.ஆரிடம் நேருக்கு நேராக கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியவர்களில் ஒருவரான எம் எஸ் விஸ்வநாதன் ஒர் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.  இதுபற்றி அவர் “தான் இயக்கும் மற்றும் தயாரிக்கும் படங்களின் அனைத்து முடிவுகளும் தன்னால் எடுக்கப்படவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் தான் பி.ஆர்.பந்தலு” என்று எம்.எஸ்.விஸ்வாநாதன் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

9 minutes ago

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

14 minutes ago

FLASH NEWS: கார் கோர விபத்து… 8 பேர் பலியான சோகம்… கோயிலுக்குப் போன இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!

ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…

21 minutes ago

கண்கலங்க வைக்கும் துயரம்: “டீ குடிக்கச் சென்ற இடத்தில் எமன்..” – சாத்தூரில் 3 பிளஸ்-2 மாணவர்கள் பலியான நெஞ்சை உருக்கும் பின்னணி…!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…

27 minutes ago

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

2 மணத்தியாலங்கள் ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

2 மணத்தியாலங்கள் ago