சென்னை ஆவடி காமராஜர் மெயின் ரோட்டில் 47 வயதான தொழிலதிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலுக்கு சென்று அங்குள்ள பாரில் மது அருந்திய நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காதலியான இளம் பெண்ணும் மது குடித்துள்ளார். போதை தலைக்கு ஏறிய நிலையில் இருவரும் அதே ஹோட்டலில் அரை எடுத்து தங்கி இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளனர். மறுநாள் காலையில் கண்விழித்து பார்த்த போது தன்னுடைய அருகில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் தொழிலதிபர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையும் மாயமாகி இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். தொழிலதிபருடன் உல்லாசமாக இருந்த இளம் பெண் அவருடைய செயினை திருடி கொண்டு ஹோட்டலில் இருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து 10 பவுன் நகையை திருடி தப்பி ஓடிய கில்லாடி பெண்ணை தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அந்தப் பெண் தொழிலதிபரின் காதலி.
இருவரும் இதுபோன்ற அடிக்கடி வெளியில் தங்கி உல்லாசமாக இருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். வழக்கம்போல மது அருந்திவிட்டு ஹோட்டலில் தங்கி இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில் இதனை பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண் 10 பவுன் நகையை நைசாக திருடிக் கொண்டு தப்பி சென்று விட்டார். அந்த இளம் பெண் 28 வயதான தீபிகா என்பது தெரிய வந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…
மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…
மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…