“இப்படியெல்லாம் கூட திருட முடியுமா?”… சென்னை வில்லிவாக்கம் ஆட்டோ ஓட்டுனரின் பகீர் யுக்தி.. போலீஸாரே தலைசுற்றிப் போயிட்டாங்க…!

Spread the love

சென்னை போன்ற பெருநகரங்களில் காவல்துறை எவ்வளவுதான் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும், கொள்ளையர்கள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது பெரும் சவாலாகவே உள்ளது. அந்த வகையில், சென்னையில் சிக்னல் விளக்கை மறைத்து ரயில்களை நடுவழியில் நிறுத்தி, பயணிகளிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குமரேசன் (35) என்பவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பகல் நேரங்களில் சாதாரணமாக ஆட்டோ ஓட்டி வரும் இவர், இரவு நேரங்களில் இந்த நூதன கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளார்.

இவரது திருட்டு யுக்தி காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரவில் ரயில் வரும் நேரத்தில், அங்குள்ள சிக்னல் விளக்கை ஒரு துணியைக் கொண்டு குமரேசன் மறைத்து விடுவார். இதனால் ஆபத்து என்று நினைத்து ஓட்டுனர் ரயிலை நடுவழியில் நிறுத்தும்போது, சட்டென்று ரயிலுக்குள் புகுந்து பயணிகளை மிரட்டி நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடுவதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏற்கனவே இவர் மீது 6 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதோடு, குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் பிடிபட்டுள்ள இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“வீட்டை விற்ற பணம் வேணும்…” பேராசையில் மனைவி… மைத்துனர், சகோதரனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகம்…. சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை…

1 minute ago

“பாவம் அந்த வாயில்லா ஜீவன்…” தினமும் நாயை அடித்து சித்திரவதை செய்த நபர்…. ஆப்பு வைத்த தன்னார்வலர்கள்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…

9 minutes ago

ஐயோ… பாப்பாவுக்கு என்ன ஆச்சு?… படிக்கட்டில் வழுக்கி விழுந்த… 4-ஆம் வகுப்பு சிறுமி பரிதாப பலி… அதிர்ச்சியில் பெற்றோர்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு 4-ஆம் வகுப்பு படித்து…

9 minutes ago

யோவ் நிறுத்துயா… காரில் சிக்கிய பைக்கை… அலற அலற அரை கி.மீ இழுத்துச் சென்ற முதியவர்… டெல்லியில் நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!!

தெற்கு டெல்லியின் ஆர்.கே. புரம் பகுதியில் புதன்கிழமை இரவு 10 மணியளவில் அதிவேகமாக வந்த ஹோண்டா அமேஸ் கார் ஒன்று,…

20 minutes ago

நடுவானில் பரபரப்பு…! “சட்டை கிழிந்து தொங்க விமானத்தில் கடும் சண்டை…” 100-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர் ஆபத்தில்…! திக் திக் வீடியோ வைரல்…!!

நூற்றுக்கணக்கான பயணிகளுடன் நடுவானில் அதிவேகத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில், எதிர்பாராதவிதமாகப் பயணிகள் சிலருக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. சீட்…

30 minutes ago

டேய் அங்க பாருடா… எவ்ளோ பெரிய பாம்பு?… நள்ளிரவில் ஐடி நிறுவன வாசலில்… புகுந்த ராட்சச மலைப்பாம்பு… பதறிப்போன ஊழியர்கள்… பதறவைக்கும் வீடியோ…!!

ஹைதராபாத்தில் உள்ள துர்க்கம் செருவு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்திற்கு வெளியே, செப்டம்பர் 17…

36 minutes ago