“இப்படியெல்லாம் கூட திருட முடியுமா?”… சென்னை வில்லிவாக்கம் ஆட்டோ ஓட்டுனரின் பகீர் யுக்தி.. போலீஸாரே தலைசுற்றிப் போயிட்டாங்க…!

Spread the love

சென்னை போன்ற பெருநகரங்களில் காவல்துறை எவ்வளவுதான் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும், கொள்ளையர்கள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது பெரும் சவாலாகவே உள்ளது. அந்த வகையில், சென்னையில் சிக்னல் விளக்கை மறைத்து ரயில்களை நடுவழியில் நிறுத்தி, பயணிகளிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குமரேசன் (35) என்பவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பகல் நேரங்களில் சாதாரணமாக ஆட்டோ ஓட்டி வரும் இவர், இரவு நேரங்களில் இந்த நூதன கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளார்.

இவரது திருட்டு யுக்தி காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரவில் ரயில் வரும் நேரத்தில், அங்குள்ள சிக்னல் விளக்கை ஒரு துணியைக் கொண்டு குமரேசன் மறைத்து விடுவார். இதனால் ஆபத்து என்று நினைத்து ஓட்டுனர் ரயிலை நடுவழியில் நிறுத்தும்போது, சட்டென்று ரயிலுக்குள் புகுந்து பயணிகளை மிரட்டி நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடுவதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏற்கனவே இவர் மீது 6 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதோடு, குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் பிடிபட்டுள்ள இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

2 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

3 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago