ஹைதராபாத் போடுப்பல் பகுதியில், 4 வயது சிறுவன் மீது அவனது சொந்த அத்தையே ஆசிட் ஊற்றியதோடு விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு மற்றும் சொத்து விவகாரம் காரணமாக இந்தச் சிறுவன் மீது அவரது அத்தை நீண்ட நாட்களாகக் கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்தப் பெண் சிறுவனுக்கு விஷம் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, ஆத்திரத்தின் உச்சியில் சிறுவனின் உடலில் ஆசிட் ஊற்றித் தாக்குதலும் நடத்தியுள்ளார். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அந்தச் சிறுவன் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
தகவலறிந்து வந்த போலீசார், தப்பியோட முயன்ற அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழிவாங்கும் நோக்கத்திற்காக ஒரு பிஞ்சு குழந்தையை இவ்வளவு கொடூரமாகச் சிதைக்கத் துணிந்த அந்தப் பெண்ணின் செயல் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…