“என் மேல புகார் கொடுத்தவங்க லிஸ்ட் என்கிட்ட இருக்கு!”.. கார்த்தி சிதம்பரம் எம்பி பேசிய ஆடியோ லீக்… அலறும் அரசியல் களம்..!!

Spread the love

“கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த உடனேயே, காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நான் பேசியபோது எனக்கு எதிராகச் சத்தியமூர்த்தி பவனில் புகார் அளித்தார்கள்” என்று சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியுள்ள ஆடியோ ஒன்று தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று ‘கூட்டணி ஆட்சி வேண்டும்’ என்று தங்களை முதன்மைப்படுத்திக் கொள்பவர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் அந்த ஆடியோவில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, புதுக்கோட்டையிலும் சிவகங்கையிலும் தான் பேசும் போது, ‘வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்’ என்று முதன்முதலில் கூறியதாகக் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தான் அதைச் சொன்ன உடனே, ‘கூட்டணிக்குக் களங்கம் விளைவிக்கிறார் கார்த்தி சிதம்பரம்’ என்று சத்தியமூர்த்தி பவனில் தனக்கு எதிராகப் புகார் கொடுத்தார்கள் என்றும், தன்னை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கோரினார்கள் என்றும் அவர் சாடியுள்ளார். அவ்வாறு புகார் கொடுத்தவர்கள் யார் என்ற விவரங்கள் தன்னிடம் இப்போதும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த திமுக ஆட்சியின் போது பொதுநலன் சார்ந்த விஷயங்களில் இருக்கக்கூடிய குறைகளைத் தான் சுட்டிக்காட்டியபோது கூட, தனக்கு யாரும் ஆதரவாக நிற்கவில்லை என்று அவர் ஆதங்கப்பட்டுள்ளார். சட்டமன்றத்தில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் உட்பட நம்முடைய எந்தவொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும் ஒரு வார்த்தை கூட தனக்கு ஆதரவாகப் பேசியது கிடையாது என்று குறிப்பிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், திமுக ஆட்சியின் குறைகளைத் தான் சொன்னபோது எல்லாரும் சட்டமன்றத்தில் அமைதியாகத்தான் இருந்தார்கள் என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.

தவெக – காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசுகையில், புதிய கூட்டணியை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றும், தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி பங்கெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை இப்போது இருக்கும் இவர்கள் தான் புதிதாக உருவாக்கினார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்று கார்த்தி சிதம்பரம் அந்த ஆடியோவில் பேசியிருப்பது தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

4 மணத்தியாலங்கள் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

5 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

5 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

5 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

5 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

5 மணத்தியாலங்கள் ago