“என் மேல புகார் கொடுத்தவங்க லிஸ்ட் என்கிட்ட இருக்கு!”.. கார்த்தி சிதம்பரம் எம்பி பேசிய ஆடியோ லீக்… அலறும் அரசியல் களம்..!!

Spread the love

“கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த உடனேயே, காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நான் பேசியபோது எனக்கு எதிராகச் சத்தியமூர்த்தி பவனில் புகார் அளித்தார்கள்” என்று சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியுள்ள ஆடியோ ஒன்று தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று ‘கூட்டணி ஆட்சி வேண்டும்’ என்று தங்களை முதன்மைப்படுத்திக் கொள்பவர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் அந்த ஆடியோவில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, புதுக்கோட்டையிலும் சிவகங்கையிலும் தான் பேசும் போது, ‘வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்’ என்று முதன்முதலில் கூறியதாகக் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தான் அதைச் சொன்ன உடனே, ‘கூட்டணிக்குக் களங்கம் விளைவிக்கிறார் கார்த்தி சிதம்பரம்’ என்று சத்தியமூர்த்தி பவனில் தனக்கு எதிராகப் புகார் கொடுத்தார்கள் என்றும், தன்னை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கோரினார்கள் என்றும் அவர் சாடியுள்ளார். அவ்வாறு புகார் கொடுத்தவர்கள் யார் என்ற விவரங்கள் தன்னிடம் இப்போதும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த திமுக ஆட்சியின் போது பொதுநலன் சார்ந்த விஷயங்களில் இருக்கக்கூடிய குறைகளைத் தான் சுட்டிக்காட்டியபோது கூட, தனக்கு யாரும் ஆதரவாக நிற்கவில்லை என்று அவர் ஆதங்கப்பட்டுள்ளார். சட்டமன்றத்தில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் உட்பட நம்முடைய எந்தவொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும் ஒரு வார்த்தை கூட தனக்கு ஆதரவாகப் பேசியது கிடையாது என்று குறிப்பிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், திமுக ஆட்சியின் குறைகளைத் தான் சொன்னபோது எல்லாரும் சட்டமன்றத்தில் அமைதியாகத்தான் இருந்தார்கள் என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.

தவெக – காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசுகையில், புதிய கூட்டணியை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றும், தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி பங்கெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை இப்போது இருக்கும் இவர்கள் தான் புதிதாக உருவாக்கினார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்று கார்த்தி சிதம்பரம் அந்த ஆடியோவில் பேசியிருப்பது தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

விவசாயிகள் ஷாக்… CM விஜய் அறிவித்த ரூ.75,000 கடன் தள்ளுபடி…. யாருக்கெல்லாம் முழுசா கிடைக்கும்?…. லிஸ்ட்டுல உடனே செக் பண்ணுங்க….!

விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கான தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி,…

7 minutes ago

BREAKING: அண்ணாமலைக்குப் பின் டெல்லியில் ஒலிக்கும் தமிழரின் குரல்…. தேசிய பாஜகவில் களமிறங்கிய ம.வெங்கடேசன்…. நிதின் நபின் அறிவிப்பு….!

பாஜகவின் அமைப்பு ரீதியான மாற்றங்களைத் தொடர்ந்து புதிய நியமனங்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச்…

13 minutes ago

பயங்கர சத்தம்..! சுக்குநூறான கட்டடம்..! 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அலறல்… நொடியில் நடந்த கோர விபத்து… பதறவைக்கும் வீடியோ…!!

பால்கர் மாவட்டத்தின் போய்சார் பகுதியில் உள்ள தாராபூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'விராஜ் ப்ரொஃபைல்ஸ்' எஃகு உற்பத்தி ஆலையில் திங்கள்கிழமை…

29 minutes ago

“என்னிடம் ஆடியோ ஆதாரம் இருக்கு”… புதிய அமைச்சர்களின் கமிஷன் லீக்ஸ்… விஜய்க்கு அண்ணாமலை வைத்த செக்…. அரசியலில் திடீர் பரபரப்பு…!

தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதே தனது அரசின் முதன்மை இலக்கு என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்…

30 minutes ago

பள்ளிக்கு அனுப்பவே பயமாக இருக்கு…! மெட்ரோ விபத்தால் பதறிப்போன பெற்றோர்கள்… அரசுக்கு MNS வைத்த அதிரடி செக்…!!

மீரா ரோடு - பயந்தர் எல்லையில் உள்ள கோல்டன் நெஸ்ட் பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில்,…

40 minutes ago

“‘கல்யாணம் பண்ணிக்கோ’ன்னு கேட்டது ஒரு குத்தமா?”…. காதலியை வெட்டிக் கொன்று சாக்கில் அடைத்த இளைஞர்…. வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்…!

ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

40 minutes ago