இயக்குனர் அட்லி ராஜா ராணி படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு விஜயின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
இதனையடுத்து ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. மேலும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அல்லு அர்ஜுனன் வைத்து அட்லீ அடுத்ததாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.
அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை பொதுவாக நடிகர் நடிகைகளுக்கு குறைவாக சம்பளம் பேசினாலும் அதனை கரெக்டாக கொடுத்து விடுவார்கள். மேலும் பல கண்டிஷனும் போடுவார்கள்.
இந்த முறை அட்லீ சம்பளம் ஒருபுறம் இருந்தாலும், படம் அதிகமாக வசூல் செய்தால் அதில் குறிப்பிட்ட ஷேர் கொடுக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளாராம். அதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஓகே சொல்லியதாக கூறப்படுகிறது.