Categories: சினிமா

‘ரோஜா’ பட நடிகையை 32 வருடங்களுக்கு பிறகு சந்தித்த அரவிந்த் சாமி… இதுதான் காரணமா?… புகைப்படம் வைரல்…

Spread the love

தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அரவிந்த்சாமி, முதல் படத்திலேயே தனது அபார நடிப்பால் ரசிகர்கள் மனதில் கொள்ளை கொண்டார். அதன்பிறகு இவர் நடித்த “ரோஜா” திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக மதுபாலா நடித்திருந்தார்.

கே.பாலச்சந்தர் தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். ரோஜா திரைப்படம் மட்டும் இல்லாமல், அதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனது. அது மட்டும் இல்லாமல் இந்த ஒரு படத்தின் மூலம் பல பெண் ரசிகைகளை தனதாக்கி கொண்டார் அரவிந்த்சாமி.

ரோஜா படத்தில் ரிஷி குமார் என்ற கேரக்டரில் அரவிந்த் சாமியும், அவருக்கு ஜோடியான ரோஜா கேரக்டரில் மதுபாலாவும் நடித்திருந்தனர். கிராமத்தில் அக்காவை பெண் பார்க்கச் செல்லும் அரவிந்த் சாமி, மதுபாலாவை பிடித்திருக்கு என சொல்ல, அங்கிருந்து தொடங்கும் கதை காஷ்மீர் அழகியலில் சிலிர்க்க வைக்கும். முன்னதாக அரவிந்த் சாமி பெண் பார்க்கச் செல்லும் காட்சியில் வைஷ்ணவி நடித்திருப்பார்.

இதைத்தொடர்ந்து அரவிந்த் சாமியும் வைஷ்ணவியும் இணைந்து நடிக்காத நிலையில், தற்போது இந்த ஜோடி திடீரென சந்தித்துக் கொண்டது. அரவிந்த் சாமியிடம் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை என்றாலும் வைஷ்ணவி சுத்தமாக ஆளே மாறிவிட்டார். கறுப்பு நிற சுடிதார் அணிந்தபடி அரவிந்த் சாமி அருகில் நின்று போட்டோ எடுத்துள்ளார் வைஷ்ணவி.

இத்திரைப்படம் 1992 ஆகஸ்ட் 15ம் தேதி ரோஜா திரைப்படம் வெளியானது. நாளை இந்தப் படம் வெளியாகி 32வது ஆண்டை நிறைவுசெய்யும் நேரத்தில், அதில் நடித்த அரவிந்த் சாமியும் வைஷ்ணவியும் சந்தித்துள்ளனர். தற்பொழுது இப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

8 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

8 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

8 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

8 மணத்தியாலங்கள் ago