Categories: சினிமா

என்னை அறிந்தால் படத்தில் நான் நடிக்க காரணமே இது தான்.. முதல்முறையாக மனம் திறந்த நடிகர் அருண் விஜய்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள அருண் விஜய் தற்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் பல போராட்டங்களுக்கு பிறகு தான் இந்த இடத்தை அடைந்துள்ளார். 90களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய்க்கு அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க சுமார் 20 வருடங்கள் ஆனது. இந்த 20 வருடங்களும் தன் விடாமுயற்சியை கைவிடாமல் அவர் தொடர்ந்து போராடி வந்தார். அந்தப் போராட்டத்திற்காக பயனை தான் தற்போது அருண் விஜய் அனுபவித்து வருகின்றார். கடந்த 2015 ஆம் ஆண்டு கௌதமேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் அவருக்கு சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதனை தொடர்ந்து குற்றம் 23, தடம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது தனுசுடன் இணைந்து இட்லி கடை மற்றும் ரெட்டை தல போன்ற பல படங்களில் நடித்து வரும் அருண் விஜயின் நடிப்பில் அடுத்ததாக வணங்கான் திரைப்படம் வெளியாக உள்ளது. பாலா மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதேபோல அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் வெளியாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளி போனது.

இப்படியான நிலையில் அருண் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டியில், விடாமுயற்சி திரைப்படத்துடன் என் படமும் வெளியாகிறது என்பது மகிழ்ந்திருமேனிக்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஆனால் பொங்கலுக்கு விடாமுயற்சி வெளியாகாதது என்பதை எனக்கு வருத்தம். சில மாதங்களுக்கு முன்பு அஜித் சாரை நான் சந்தித்தேன். அப்போது நான் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக கூறினேன். அப்போதுதான் வணங்கான் படத்தில் நான் கமிட்டானேன். நான் பாலாவின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் அஜித் அவருடைய மனைவி ஷாலினியை அழைத்து அருண் பாலா படத்தில் நடிக்க போகிறார் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

அன்னைக்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நான் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு ஒவ்வொரு அனுபவத்தை கொடுத்தது. குறிப்பாக மகிழ்திருமேனி இயக்கத்தில் தடையற தாக்க திரைப்படத்தில் நடித்த பிறகுதான் என்னையே நான் உணர்ந்து கொண்டேன். அந்தப் படத்தில் நடித்த பிறகுதான் கௌதம் மேனன் சார் கண்ணில் நான் பட்டேன். என்னை அறிந்தால் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நான் சரியாக இருப்பேன் என்று அவருக்கு தோன்றியது. அப்படித்தான் அப்படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று அருண் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

சோகம்..! “காதலன் செஞ்ச அந்த காரியம்” அவமானம் தாங்க முடியல… திருமணத்திற்கு முன் பெண்ணின் குடும்பமே தற்கொலை…!!

கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…

13 minutes ago

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

23 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

32 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

41 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

51 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

1 மணத்தியாலம் ago