நேபாள நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நேபாள ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்ட ஆபத்தான மீட்புப் பணியின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வெள்ள நீரால் சூழப்பட்ட கட்டடம் ஒன்றின் மொட்டை மாடியில் இளைஞர் ஒருவர் சிக்கிக் கொண்டார். சுற்றிலும் சீறிப் பாயும் வெள்ளமும் கழிவுகளும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவ்வழியாக வந்த ராணுவ ஹெலிகாப்டரை நோக்கித் தனது டி-ஷர்ட்டை அசைத்து அந்த இளைஞர் உதவி கோரினார்.
உடனடியாகக் களமிறங்கிய நேபாள ராணுவ ஹெலிகாப்டர், கட்டடத்தின் கூரைக்கு அருகே மிகவும் ஆபத்தான முறையில் சென்று, ராணுவ வீரரின் உதவியோடு அந்த இளைஞரைப் பாதுகாப்பாக மீட்டு ஹெலிகாப்டருக்குள் ஏற்றியது.
போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் நிலவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற ஹெலிகாப்டர் மீட்புப் பணிகள் மூலமாகப் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. நேபாள ராணுவத்தின் இந்தத் துணிச்சலான மீட்பு நடவடிக்கைக்கு இணையவாசிகள் பலர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, ரஷ்யாவிடம்…
தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டம் கொட்டப்பள்ளி மண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிசந்தர். இவருடைய மனைவி மமதா, கணவரிடம் கோபித்துக் கொண்டு…
கான்பூரில் நடைபெற்ற ஒரு கிட்டி பார்ட்டி, எதிர்பாராதவிதமாக ஒரு கொடூரமான கொலைத் திட்டத்திற்கான மறைப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.…
கல்லூரி படிப்பின் போது டெலிகிராம் சமூக வலைதளத்தில் வெறும் 300 மாணவர்களுடன் சிறிய முயற்சியாகத் தொடங்கப்பட்ட 'டெல்டா எஜுகேஷன்' இன்று…
கர்நாடக மாநிலம் தொட்டபள்ளாப்பூரில் உள்ள விடுதி ஒன்றில், 23 வயதான வித்யா என்ற பெண் அவரது கணவர் ஆனந்தால் ஐடி…
ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் தேபதமுண்டா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கார்செல் (45) கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரெனக்…