கல்லூரி படிப்பின் போது டெலிகிராம் சமூக வலைதளத்தில் வெறும் 300 மாணவர்களுடன் சிறிய முயற்சியாகத் தொடங்கப்பட்ட ‘டெல்டா எஜுகேஷன்’ இன்று ரூ. 10 லட்சம் வருவாய் ஈட்டும் ஒரு மாபெரும் லாபகரமான ஸ்டார்ட்அப் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ஸ்கேலர் ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜி மாணவரான ஹேம்கேஷ், 12-ஆம் வகுப்பிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் எதிர்கொள்ளும் நுழைவுத்தேர்வுகள் மற்றும் சேர்க்கை சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நிறுவனத்தை உருவாக்கினார். வெளிப்புற நிதி உதவி எதுவுமின்றி, தங்களது சொந்த நிதி மேலாண்மை மூலம் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுப் பயிற்சிகளை வழங்கி இந்த நிறுவனம் பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டியுள்ளது.
மேலும், கல்லூரியைச் சேர்ந்த சக மாணவர்களையே ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்களாகப் பணியமர்த்தி ஹேம்கேஷ் அசத்தி வருகிறார். “எந்த ஒரு தொடக்கமும் முழுமையடைந்ததாக இருக்க வேண்டும் என்றில்லை, சிறிய அளவில் தொடங்குங்கள்” என இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஹேம்கேஷ் அறிவுரை கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…