பாமகவில் அடுத்த பரபரப்பு… ஜி.கே மணி தொகுதியில் களமிறங்கும் அன்புமணி…!!

Spread the love

பாமக தலைவர் அன்புமணி தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக அக்கட்சியினர் பலரும் விருப்பம் மனு அளித்துள்ளனர். வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் பாமகவினர் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி முதல் இருபதாம் தேதி வரை விருப்பமான அளிக்கலாம் என்று அன்புமணி அறிவித்திருந்தார். இது டிசம்பர் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதலால் பாமகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. அன்புமணி மீதான ஊழல் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று ராமதாஸ் தலைமையில் நடந்த நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இருவரும் சமாதானமாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் களமிறங்க அன்புமணி முடிவு செய்துள்ளார். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போட்டியிட்ட அன்புமணி குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2021 ஆம் ஆண்டு சட்டசரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பாக அதன் கௌரவ தலைவர் ஜிகே மணி பென்னாகரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது ராமதாஸ் பக்கம் இருக்கும் ஜிகே மணி தான் தன்னை அப்பாவிடம் இருந்து பிரித்து விட்டதாகவும் அவர் திமுகவின் கைக்கூலி மற்றும் துரோகி என்றும் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் வருகின்ற தேர்தலில் ஜிகே மணியை தோற்கடிக்க முடிவு செய்துள்ள அன்புமணி அவர் எம்எல்ஏவாக இருக்கும் பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதனை அறிந்த பாமக நிர்வாகிகள் குறிப்பாக தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பெண்ணாகரத்தில் அன்புமணி போட்டியிட வேண்டும் என்று விருப்பமான அளித்துள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணியின் மனைவி சௌமியா தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார். சட்ட சபை தொகுதி வாரியாக மகளிர் அணி கூட்டங்களில் அவர் பங்கேற்று வருகின்றார். பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருந்த அவர் தற்போது தன் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கிருஷ்ணசாமியின் சொந்த தொகுதியான செய்யாறில் போட்டியிட ஆலோசித்து வருவதாக தெரிகிறது. தற்போது இது பாமகவில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

3 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

3 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

4 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

4 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

4 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago