அன்புமணி பாமகவின் உறுப்பினரே கிடையாது, அவர் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் தந்தை மகன் இடையேயான அரசியல் மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணியை ஒரு அந்நியரைப் போல கையாண்டார். அவர் ஏதோ ஒரு வழிப்போக்கன் பேசுவது போல சொல்லிவிட்டு செல்கின்றார், அவர் பேசுவதை பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை என்று ஒற்றை வரியில் பொதுக்குழுவை நடத்த ராமதாஸுக்கு அனுமதி இல்லை என்று அன்புமணி கூறியதற்கு ராமதாஸ் பதிலளித்தார்.
அன்புமணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டார் என்பதை உறுதிப்படுத்திய ராமதாஸ், அவர் கட்சியிலேயே இல்லை. அப்படி சொல்வதற்கு அவருக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். அன்புமணியின் பொய்யும் புரட்டும் இனி எடுப்படாது. நூற்றுக்கு 99 சதவீத பாமகவினர் இப்போதும் என் பக்கம் நிற்கின்றனர் என்று ராமதாஸ் தனது பலத்தை நிரூபித்தார்.
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…