பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனங்கள், உலக அளவில் பெரும் புகழைப் பெற்றுள்ளது. இதனால் பெங்களூரை தொழில்நுட்ப பூங்கா என்று அழைக்கப்படுகிறது.. பெங்களூரில் ரோபோ பயன்பாடு அதிகமாக உள்ளது ஓட்டல்களில் ரோபோக்கள் உணவு பரிமாறுகிறதாம் மேலும் வீடுகளை கூட்ட பெருக்க வீட்டை துடைக்க என்றெல்லாம் ரோபோக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
தற்போது , பெங்களூரை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் தோசை சுடும் ரோபோ கண்டுபிடித்திருக்கிறாராம். அவர் ரெடிட் இணையதளத்தில் ரோபோ தோசை சுடும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். நான் வடிவமைத்துள்ள ரோபோ அடுப்பில் தோசை கல்லை வைத்து விட்டால் போதும் தானாகவே மாவை ஊற்றி தோசை சுடும்.
என் குடும்ப உறுப்பினர்களுக்கு தோசை சுட மிகவும் சிரமமாக இருந்தது அதனாலேயே இந்த ரோபோவை வடிவமைத்துள்ளேன். என் ரோபோவிற்கு கிண்டி என பெயரும் சூட்டியுள்ளேன். திண்டி என்றால் தமிழில் சிற்றுண்டி என்று பொருள். இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ஆவலோடு காத்திருக்கிறேன். இது வணிகப்பதிவு அல்ல, இது எனது புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
