சமீபத்தில் இணையதளத்தில் வைரலாகும் வீடியோ, மலைப்பாம்பின் ஆபத்தை அறியாமல் விளையாடிய மனிதனுக்கு நேர்ந்த சோகம். இளைஞன் ஒருவன் மலை பாம்பை பிடித்து பயமின்றி பாம்புடன் விளையாடிக் கொண்டே கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளார். பாம்பின் தலைக்கு அருகே கையை இளைஞன் கொண்டு சென்றப்போது திடீரென்று அவனது முகத்திலேயே கடித்து விட்டது. சட்டென்று நடந்த இந்த விபத்து நாள் பார்த்தவர் பலரும் அதிர்ந்து போய் உள்ளனர். விஷமற்ற பாம்பு என்றாலுமே, விளையாட்டு விபரீதத்தில் முடிந்து விட்டது. இளைஞனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
Snake Saver Afsar என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஒருவர், இது அவனுக்குத் தேவைதான் என்றும். இன்னொருவர், வரலாற்றிலேயே சுவாரஸ்யமான முத்தம் என்று கிண்டலாக எழுதியுள்ளார். ப்ரெண்ட் ஆவதற்காக என்னென்னலாம் செய்றீங்க.
