சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலர் எந்த கட்சியில் சேர்ந்தால் தங்களுக்கு நல்லது என்பதை அறிந்துகொண்டு கட்சி மாறி இணைந்து வருகிறர்கள். இந்நிலையில் அமமுகவில் இருந்து அடுத்தடுத்து பல நிர்வாகிகள் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை மாவட்ட வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் R.சுரேஷ், அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். முன்னதாக அமமுகவினர் சிலர் அதிமுகவில் இணைந்து வருவது குறித்து பேசிய டிடிவி தினகரன், விசுவாசம் இல்லாதவர்கள் தான் கட்சி மாறி வருவதாக சாடியிருந்தார்.
