திடீர் திருப்பம்… தமிழகத்திலும் பீகார் ஃபார்முலா… அமித்ஷா போடும் மாஸ்டர் பிளான்… செம ஷாக்கில் ஸ்டாலின்…!

By Nanthini on கார்த்திகை 16, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக இந்த முறை எப்படியாவது தங்கள் ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. அதற்காக பல வியூகங்களை வகுத்து வரும் நிலையில் விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைப்பு முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே பீகாரில் பாஜக வெற்றிக்கு சிராக் பஷ்வானின் லோக் ஜனசக்தி முக்கிய காரணமாக அமைந்தது.

அதேபோல தமிழகத்திலும் பட்டியல் இன கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் வாக்குகளை அறுவடை செய்ய அமித்ஷா முடிவெடுத்துள்ளாராம். விடுதலை சிறுத்தைகள் கட்சியை உதாரணம் காட்டி தமிழகத்தில் பட்டியல் இன கட்சிகள் முக்கிய அரசியல் சக்தியாக மாறுவதை திமுக விரும்பவில்லை, ஆனால் பிற மாநிலங்களில் உருவாக முடிகிறது என எடுத்துக் கூறி ஒருங்கிணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இனி வரும் நாட்களில் தேர்தல் களம் சூடு பிடிக்கும் என தெரிகிறது