CINEMA
நடிகர்களான அமீர்கான், விஷ்ணு விஷால் குடும்பத்துக்கு உதவிய அஜித்.. பொது மக்களுக்கு உதவினாரா..?உண்மையிலேயே நடந்தது என்ன.?
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று மற்றும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் வசித்து வந்த மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கான்கிரீட் வீடுகள் மற்றும் அப்பார்ட்மெண்ட் வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பலரும் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு அரசு பல உதவிகளை செய்து வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள்.
இந்த வெள்ள பாதிப்பால் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காரப்பாக்கம் பகுதியில் தன்னுடைய தாயாரின் சிகிச்சைக்காக தங்கி இருந்த பாலிவுட் நடிகர் அமீர் கானும் விஷ்ணு விஷாலும் போட் மூலம் வெளியேறினார். இந்த விஷயம் குறித்து அறிந்த நடிகர் அஜித், விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கானை நேரில் சந்தித்துள்ளார். மேலும் கமிட்டி மெம்பர்ஸ் வில்லாவிற்கு அவர்கள் செல்ல அஜித் கார் ஏற்பாடு செய்த உதவி உள்ளார். இந்த தகவலை விஷ்ணு விஷால் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து நன்றி கூறியிருந்தார்.
இந்த நிலையில் அஜித் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதாகவும் பல செய்திகள் வெளியான நிலையில் தற்போது அது குறித்த உண்மை தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அமீர்கான் வந்திருப்பதை அறிந்த அஜித் அவரை எதற்கு சந்திப்பதற்கு அங்கு சென்றதாகவும் அவர்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு ஏற்பாடுகளை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தவிர்த்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அஜித் எந்த ஒரு உதவியும் பெரிதாக செய்யவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.