Categories: சினிமா

“அது மட்டும் வொர்க் ஆகலன்னா நான் வாழ்க்க முழுக்க பெட்லதான் இருக்கணும்…” சுந்தர் சி-யிடம் அஜித் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

ஆக்‌ஷன் பாதைக்கு திரும்பும் முன்னர் அவர் நடித்த குடும்ப பாங்கான கதைகளில் ஒன்றுதான் உன்னைத் தேடி. இந்த படத்தை இந்த டெம்ப்ளேட்டுக்கு என்றே இருக்கும் இயக்குனரான சுந்தர் சி இயக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம் அஜித்.

இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அஜித் கடுமையான முதுகுவலிப் பிரச்சனையால் அவதிப்பட்டாராம். அப்போது அஜித் தன்னுடைய உடல்நிலை குறித்து பகிர்ந்த தகவலை சுந்தர் சி ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “அஜித் ஒருநாள் என்னிடம் வந்து எனக்கு கடுமையான முதுகுவலி பிரச்சனை உள்ளது. அதற்காக நான் அறுவை சிகிச்சை செய்யவேண்டும்.

இந்த அறுவை சிகிச்சை நன்றாக நடந்தால் பிரச்சனை இல்லை. ஒருவேளை ஆப்பரேஷன் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்றால் நான் என் வாழ்க்கை முழுக்க படுக்கையிலேயே கிடக்க வேண்டியதுதான். அதனால் என்னை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விடுங்கள்” எனக் கூறினார்.

அவ்வளவு உடல்நலப் பிரச்சனைகளோடும் அவர் அந்த படத்தில் கஷ்டப்பட்டு அர்ப்பணிப்போடு நடித்தார் என்றும் கூறியுள்ளார் சுந்தர் சி.

vinoth

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

2 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

2 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

2 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

2 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

2 மணத்தியாலங்கள் ago