Connect with us

CINEMA

“அது மட்டும் வொர்க் ஆகலன்னா நான் வாழ்க்க முழுக்க பெட்லதான் இருக்கணும்…” சுந்தர் சி-யிடம் அஜித் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

   

ஆக்‌ஷன் பாதைக்கு திரும்பும் முன்னர் அவர் நடித்த குடும்ப பாங்கான கதைகளில் ஒன்றுதான் உன்னைத் தேடி. இந்த படத்தை இந்த டெம்ப்ளேட்டுக்கு என்றே இருக்கும் இயக்குனரான சுந்தர் சி இயக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம் அஜித்.

இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அஜித் கடுமையான முதுகுவலிப் பிரச்சனையால் அவதிப்பட்டாராம். அப்போது அஜித் தன்னுடைய உடல்நிலை குறித்து பகிர்ந்த தகவலை சுந்தர் சி ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “அஜித் ஒருநாள் என்னிடம் வந்து எனக்கு கடுமையான முதுகுவலி பிரச்சனை உள்ளது. அதற்காக நான் அறுவை சிகிச்சை செய்யவேண்டும்.

இந்த அறுவை சிகிச்சை நன்றாக நடந்தால் பிரச்சனை இல்லை. ஒருவேளை ஆப்பரேஷன் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்றால் நான் என் வாழ்க்கை முழுக்க படுக்கையிலேயே கிடக்க வேண்டியதுதான். அதனால் என்னை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விடுங்கள்” எனக் கூறினார்.

அவ்வளவு உடல்நலப் பிரச்சனைகளோடும் அவர் அந்த படத்தில் கஷ்டப்பட்டு அர்ப்பணிப்போடு நடித்தார் என்றும் கூறியுள்ளார் சுந்தர் சி.

Continue Reading

More in CINEMA

To Top