#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின் புலமும் இல்லாமல் தனது முயற்சியால் தன்னம்பிக்கையால் சினிமாவில் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் அஜித்குமார். அஜித் குமாருக்கு இத்தனை ரசிகர்கள் இருப்பதற்கு காரணம் அவரது எளிமை ஒரு காரணம்.
அஜித் அவர்களுடன் பழகிய எல்லா பிரபலங்களும் மனிதர்களும் அவரை போல் ஒரு நல்ல மனிதரை பார்த்ததில்லை எளிமையான மனிதரை பார்த்ததில்லை தலைக்கணமே இல்லாதவர் என்று கூறுகின்றனர். மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். கார் ரேசிங்கில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் ரேசர் ஆகவும் இருந்திருக்கிறார் அஜித்குமார்.
மற்ற நடிகர்களை போல் இல்லாமல் அடுத்தடுத்து படம் பண்ண வேண்டும் என்று அவசரம் இல்லாமல் பொறுமையாக நிதானமாக கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்கள் விரும்பும் படியாக படங்களில் நடித்து வருகிறார் அஜித். அப்படி ஒன்று கடந்த ஆண்டு முதல் அஜித் நடிப்பில் வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் ஒரு திரைப்படம் தான் விடாமுயற்சி.
இப்போது வரும் அப்போது வரும் என்று அப்டேட்டுக்காக எதிர்பார்த்த நிலையில் இந்த படம் தள்ளிக்கொண்டே தான் போகிறது. தற்போது இன்று மாலை ஆறு முப்பதுக்கு விடா முயற்சி அப்டேட் வரும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவித்திருந்தது.
அதன்படி அப்டேட் வெளியானது. அதில் என்னவென்றால் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது என்பதுதான். அந்த அப்டேட் வெளியானதை பார்த்த அஜித் ரசிகர்கள் மிகுந்த அப்செட் ஆகி இருக்கின்றார்கள். இப்போதைக்கு படம் ரிலீசாகாது போலயே என்று நெடிசன்கள் பேசி வருகின்றனர்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…