#image_title
தமிழ் சினிமாவில் கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருமான வாலி எம்ஜிஆர்,சிவாஜி காலம் தொடங்கி தனுஷ் காலம் வரை பாடல்களை எழுதியவர் வாலி. இவை எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி, தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய “நினைவு நாடாக்கள”‘ என்ற தொடரும் பெயர் பெற்றது.
#image_title
வாலி, திரைப்படங்களுக்கு 15,000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த திரைப்படங்களுள், பார்த்தாலே பரவசம்,சத்யா, ஹேராம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், ‘கையளவு மனசு’ என்ற தொலைக்காட்சித் தொடரிலுமம் இவர் நடித்துள்ளார். கடந்த 2007 ஆம் வருடத்தில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
#image_title
1967 ஆம் வருடம் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கிறது. அதில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இடம் பெற்ற இவர் இயற்றிய “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என்ற பாடலும் ஒரு காரணம் தான். மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் வெற்றி பெற்றது.
#image_title
இந்நிலையில் வாலி குறித்த ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. அந்தவகையில் தன் பாடலை எழுத தயாரிப்பாளர்களுக்கு ஒரே ஒரு கண்டிஷன் போட்டதாக நெல்லை ஜெயந்தா கூறியுள்ளார். அதாவது பாடல் எழுத 2 லட்சம் வாங்கிய வாலி 1 லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்க வேண்டும் என்று சொல்லிவிடுவாராம். அதை தன்னுடைய மகனுடைய பெயரில் வங்கியில் போட்டுவைத்து அதன் வட்டி தொகையை அத்தியாவசிய செலவுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தாராம்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…